ஒரே நாளில் தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம் 55 IAS Officers Transferred today in Tamil Nadu

55 IAS Officers Transferred today in Tamil Nadu

தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

55 IAS Officers Transferred today in Tamil Nadu : தமிழகத்தில் நிர்வாக வசதிக்காகவும், அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், 9 மாவட்ட கலெக்டர்கள், 7 மாநகராட்சி ஆணையர்கள் உட்பட மொத்தம் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரே நாளில் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பெரும் அளவிலான மாற்றம், தமிழக நிர்வாகத்தில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

55 IAS Officers Transferred today in Tamil Nadu

மாற்றப்பட்ட அதிகாரிகளின் விவரம்:

முக்கியத் துறைகளுக்குப் புதிய பொறுப்பாளர்கள்:

  • ராஜேந்திர ரத்னுா – சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் மேலாண்மை இயக்குநர்.
  • ஷில்பா பிரபாகர் சதீஷ் – வணிகவரி மற்றும் பதிவுத்துறை.
  • விஜயகுமார் – கூடுதல் தலைமைச் செயலாளர், நிலச்சீர்திருத்தம்.
  • வள்ளலார் – அரசுச் செயலாளர், சமூக சீர்திருத்தம்.
  • நாகராஜ் – வணிகவரி ஆணையர்.
  • சங்கர் – உயர்கல்வித் துறைச் செயலாளர்.
  • சமயமூர்த்தி – மனிதவள மேலாண்மைச் செயலாளர்.
  • பிரகாஷ் – சென்னை சி.எம்.டி.ஏ., முதன்மைச் செயலாளர்.
  • பிரபாகர் – தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டச் செயலாளர்.
  • வெங்கடேஷ் – நிதித்துறை அரசு சிறப்புச் செயலாளர்.
  • லில்லி – போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலாளர்.
  • கணேஷ் – நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் சிறப்புச் செயலாளர்.

இதர முக்கியப் பணியிட மாற்றங்கள்:

  • வீர் பிரதாப் சிங் – பொதுத்துறைத் துணைச் செயலாளர்.
  • சரயூ – வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச் செயலாளர்.
  • துரை ரவிச்சந்திரன் – தமிழ்நாடு நீர்வழிப்பகுதி மேம்பாட்டு முகமை துணைத் தலைவர்.
  • விஜயராணி – தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு மேலாண்மை இயக்குநர்.
  • கிறிஸ்துராஜ் – தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக இயக்குநர்.
  • உமா – சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலாளர்.
  • ஜெயசீலன் – சென்னை பெருநகர மாநகராட்சி இணை ஆணையர்.
  • சங்கீதா – சமூக நலத்துறை இயக்குநர்.
  • பிரதீப் குமார் – பேரூராட்சிகள் இயக்குநர்.
  • ராஜ கோபால் சுன்காரா – நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் இயக்குநர்.
  • கற்பகம் – உயர்கல்வித்துறை, அரசு இணைச் செயலாளர்.
  • ஆர்.வி.ஷஜீவனா – தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் மேலாண்மை இயக்குநர்.
  • ஸ்ரேயா சிங் – தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்.
  • மதுசூதன் ரெட்டி – நகராட்சி நிர்வாக இயக்குநர்.
  • சிவராசு – தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம், மேலாண்மை இயக்குநர்.
  • ஆல்பி ஜான் வர்கீஸ் – தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்குநர்.
  • கோவிந்த ராவ் – தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவன மேலாண்மை இயக்குநர்.

புதிய மாவட்ட கலெக்டர்கள் நியமனம்:

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்குப் புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம்:

  • அருண் ராஜ் – பெரம்பலூர் கலெக்டர்.
  • நாரணவரே மணிஷ் சங்கர் ராவ் – திருப்பூர் கலெக்டர்.
  • சரவணன் – திருச்சி கலெக்டர்.
  • சினேகா – செங்கல்பட்டு கலெக்டர்.
  • பிரவீன் குமார் – மதுரை கலெக்டர்.
  • சுகபுத்ரா – விருதுநகர் கலெக்டர்.
  • கந்தசாமி – ஈரோடு கலெக்டர்.
  • துர்கா மூர்த்தி – நாமக்கல் கலெக்டர்.
  • பொற்கொடி – சிவகங்கை கலெக்டர்.

புதிய மாநகராட்சி ஆணையர்கள்:

7 மாநகராட்சிகளுக்குப் புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்:

  • அமித் – திருப்பூர் மாநகராட்சி ஆணையர்.
  • கவுசிக் – பெருநகர சென்னை மாநகராட்சி, வட்டார துணை ஆணையர் (மத்தி).
  • மோனிகா ராணா – திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர்.
  • மதுபாலன் – திருச்சி மாநகராட்சி ஆணையர்.
  • பானோத் ம்ருகேந்தர் லால் – தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்.
  • சரண்யா – ஆவடி மாநகராட்சி ஆணையர்.
  • நிஷாந்த் கிருஷ்ணா – ஓசூர் மாநகராட்சி ஆணையர்.
  • அர்பித் ஜெயின் – ஈரோடு மாநகராட்சி ஆணையர்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர்கள்:

  • பிரியங்கா – கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர்.
  • பல்லவி வர்மா – திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர்.
  • அபிலாஷா கவுர் – நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர்.
  • திவ்யான்சு நிகம் – ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர்.

பிற துணை / கூடுதல் ஆணையர்கள்:

  • அனாமிகா – சென்னை நகராட்சி நிர்வாகம் துணை ஆணையர்.
  • லலித் ஆதித்ய நீலம் – ஊரக வளர்ச்சி கூடுதல் ஆணையர்.
  • அதாப் ரசூல் – சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையர்.

Leave a Comment