செல்வமகள் சேமிப்பு திட்டம்: வருகின்ற 30-ஆம் தேதி ஆவணங்களுடன் ரெடியா இருங்க! Selva Magal Semippu Thittam New Update

செல்வமகள் சேமிப்பு திட்டம்: வருகின்ற 30-ஆம் தேதி ஆவணங்களுடன் ரெடியா இருங்க!

Selva Magal Semippu Thittam New Update

Selva Magal Semippu Thittam New Update: நிதியைச் சேமிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் பல சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. இவை வங்கிகள், அஞ்சலகங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. இவற்றில், அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Selva Magal Semippu Thittam New Update
Selva Magal Semippu Thittam New Update

இந்த திட்டங்கள் பொதுவாக பாதுகாப்பானவை மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்த அஞ்சல் சேவைத் திட்டங்கள் மூலம் சென்னை வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.

அஞ்சலக சேமிப்புத் திட்டங்களின் பலன்கள்

இந்திய அஞ்சல் துறையின் மூலம் வழங்கப்படும் சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தேசிய சேமிப்புப் பத்திரங்கள் (NSC),

அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (MIS), கிசான் விகாஸ் பத்ரா (KVP), மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (செல்வமகள் சேமிப்புத் திட்டம்) போன்ற பல திட்டங்கள் அடங்கும்.

உதாரணமாக, செல்வமகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்ரித்தி யோஜனா) பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசால் 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. உங்கள் மகளுக்கு 21 வயதாகும்போது ரூ.50 லட்சம் வரை பெறக்கூடிய ஒரு சிறந்த திட்டமாகும்.

இதன் காரணமாகவே, இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.

சமீபத்தில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தபால் துறை சார்பில் மாவட்டந்தோறும் அனைத்து தபால் நிலையங்களிலும் செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பயனாளிகளுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டல தபால் துறையில் மட்டும்

கடந்த ஜனவரி மாதம் வரை 7 லட்சத்து 86 ஆயிரம் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டு, இதன் மூலம் ரூ.5,219 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் மாதம் ரூ.22,000 வரை சம்பாதிக்கலாம் தமிழக அரசின் இலவச பயிற்சி திட்டம்! Free Skill Development Scheme For Women

அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம் – சென்னை

மேற்கண்ட திட்டங்களின் வரிசையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் கோட்ட அளவிலான அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

முக்கியத் தகவல்:

  • முகாம் நடைபெறும் நாள்: 30.06.2025
  • முகாம் நடைபெறும் இடம்: தலைமை அஞ்சலகம், அண்ணா சாலை, சென்னை.
  • குறைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 26.06.2025

புகார் அளிக்கும் முறை:

தபால் சம்பந்தப்பட்ட புகார்கள்: தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை (மணியார்டர்), விரைவு தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை புகாரில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமான புகார்கள்:

கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம்,

பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

குறைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

முதன்மை அஞ்சல் அதிகாரி, அண்ணா சாலை தலைமை தபால் நிலையம், சென்னை 600 002.

தபால் உறையின் முன்பக்க மேல் பகுதியில் “அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

இந்தக் குறைதீர்க்கும் முகாம், அஞ்சல் சேவைகள் தொடர்பான உங்கள் சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்குத் தீர்வு காண ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

Leave a Comment