வடபழநி ஆண்டவர் திருக்கோயில் எழுத்தர்,அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025
Vadapalani Andavar Kovil Recruitment 2025
Vadapalani Andavar Kovil Recruitment 2025: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, இந்து மதத்தைச் சார்ந்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
முக்கிய நாட்கள்:
- விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 20.06.2025
- விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 19.07.2025 (மாலை 6.45 மணி வரை)
Vadapalani Andavar Kovil Recruitment 2025 காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள்: 05
பதவியின் பெயர்: எழுத்தர்
- சம்பளம்: மாதம் ரூ.15,700 – ரூ.50,000
- காலியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசு அங்கீகரித்த அதற்கு இணையான கல்வித் தகுதி.
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்
- சம்பளம்: மாதம் ரூ.11,600 – ரூ.36,800
- காலியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசு அங்கீகரித்த அதற்கு இணையான கல்வித் தகுதி.
பதவியின் பெயர்: மடப்பள்ளி
- சம்பளம்: மாதம் ரூ.11,600 – ரூ.36,800
- காலியிடங்கள்: 01
- கல்வித் தகுதி:
- தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- கோயில் மரபுகளுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: காவலர்
- சம்பளம்: மாதம் ரூ.11,600 – ரூ.36,800
- காலியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: திருவலகு
- சம்பளம்: மாதம் ரூ.11,600 – ரூ.36,800
- காலியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பிற முக்கிய தகவல்கள்:
- வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் இல்லை.
- தேர்வு முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை-26 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பங்கள் 19.07.2025 அன்று மாலை 6.45 மணிக்குள் சென்றடைய வேண்டும். அதற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
குறிப்பு:
விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்திற்கான இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Click here)
- விண்ணப்ப படிவம் (Click here)
- அதிகாரப்பூர்வ இணையதளம் (Click here)
- More Job Info-Click here