Birth Certificates at Hospitals: Central Government’s Bold Move!
மருத்துவமனையிலேயே பிறப்புச் சான்றிதழ்: மத்திய அரசு அதிரடி
இனி பிறப்புச் சான்றிதழ் வழங்க புதிய நடைமுறை: மத்திய அரசு அதிரடி உத்தரவு
Birth Certificates at Hospitals தேசிய மக்கள்தொகை பதிவேடு, ரேஷன் கார்டுகள், சொத்துப் பதிவு, மற்றும் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்க ஒருங்கிணைந்த தரவுதளம் பயன்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குடிமக்களுக்குத் தேவையான வசதியை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலேயே பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்தியப் பதிவாளர் ஜெனரல் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மருத்துவமனைகளில் இருந்து, குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்பாகவே, அவர்களின் தாய்மார்களிடம் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வேண்டுமா? உடனடியாக விண்ணப்பிங்க..
பிறப்புப் பதிவு முடிந்தவுடன், பிறப்புச் சான்றிதழைப் பதிவாளர் உடனடியாக வழங்க வேண்டும் என்றும், மின்னணு அல்லது பிற வடிவத்தில் பிறப்புச் சான்றிதழை ஏழு நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. Direct Birth Certificates: Centre’s Order
Hospital Birth Certificates: New Rule
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவை குழந்தை பிறப்புப் பதிவு மையங்களாகச் செயல்படும் நிலையில், பிறப்புச் சான்றிதழின் பயன்பாடு அண்மைக்காலமாகப் பன்மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, உடனடியாகப் பிறப்புச் சான்றிதழை வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.