1 முதல் 10 ஆம் வகுப்பு வரை ரூ.25,000 வரை மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?
Central Government Scholarship Scheme 2025
Central Government Scholarship Scheme 2025: மத்திய அரசு, பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. 2025-26 ஆம் நிதி ஆண்டில், 1 ஆம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் மாணவர்கள் ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை இந்த உதவித்தொகையைப் பெறலாம்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இந்த உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய முழு விவரங்களையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளம்: மாணவர்கள் https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் ஒரு முறை பதிவு (OTR) மூலம் மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- வங்கி கணக்கு: ஒவ்வொரு மாணவருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனிப்பட்ட சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும். இந்தக் கணக்கு தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
- ஆதார் இணைப்பு: விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே கல்வி உதவித்தொகை பெற தகுதியுடையவராகக் கருதப்படுவர்.
- ஆதார் ஒப்புதல்: கல்வி நிதி உதவித்தொகை பெற, விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்துவதற்கு மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களின் பங்கு:
- பதிவு: பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முதலில் https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் தங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
- விண்ணப்பங்களை சரிபார்த்தல்: பதிவு செய்த பிறகு, வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கி, தங்கள் கல்வி நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும்.
- முக்கிய குறிப்பு: கல்வி நிறுவனங்கள் மின்னணு விண்ணப்பங்களை தங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சரிபார்க்காமல் அடுத்தகட்ட சரிபார்ப்புக்குச் சமர்ப்பித்தால், அந்த விண்ணப்பங்களுக்குக் கல்வி உதவித்தொகை கிடைக்காது.
முக்கிய தேதிகள்:
- 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை: விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் ஆகஸ்ட் 31, 2025.
- மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்கள்: விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் அக்டோபர் 31, 2025.
மேலும் விவரங்களுக்கு:
மேற்கொண்டு விளக்கங்கள் மற்றும் உதவி பெறுவதற்கு, நீங்கள் கீழ்க்கண்ட முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்:
மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க.தொழில் பூங்கா, கிண்டி, சென்னை – 600032. மின்னஞ்சல்: wchwo.chn-mole@gov.in தொலைபேசி எண்: 044-29530169