EPFO New Update June 25
EPFO New Update June 25: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தனது உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் (PF) தொகையை முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான தானியங்கி வரம்பை (Automatic Settlement Limit) ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

நடவடிக்கையின் மூலம், உறுப்பினர்கள் அவசர நேரங்களில் விரைவாகவும், போதுமான நிதியைப் பெறுவதையும் EPFO உறுதி செய்துள்ளது. இதன் பொருள், பிஎஃப் பணம் முன்கூட்டியே தேவைப்படும்போது கோரிக்கை வைத்தால், மூன்று நாட்களுக்குள் பணம் உங்கள் கணக்கிற்கு வந்து சேர்ந்துவிடும்.
மேலும் ஒரு முக்கிய முன்னேற்றமாக, தொழில்துறை அமைச்சகம், UPI (யுபிஐ) மற்றும் ATM (ஏடிஎம்) வழியாக பகுதியளவு பிஎஃப் பணத்தை திரும்பப் பெறும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது EPFO-வின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு பெரிய மைல்கல்லாக அமையும்.
EPFO-வின் புதிய தானியங்கி தீர்வு முறை:
இந்த புதிய தானியங்கி செட்டில்மென்ட் தீர்வு முறை மூலம், உறுப்பினர்கள் தங்கள் முன்பண திரும்பப்பெறும் கோரிக்கைகளைத் தானாகவே மூன்று நாட்களுக்குள் பெற முடியும்.
முன்பு இந்த வசதி ரூ.1 லட்சம் வரை மட்டுமே இருந்தது. இப்போது இதன் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து தொழில்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், அரசின் இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான EPFO உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்றின் போது ஏற்பட்ட நிதிச் சவால்களைச் சமாளிக்க EPFO ஆன்லைன் தானியங்கி தீர்வு வசதியை அறிமுகப்படுத்தியது.
இந்த வசதி மருத்துவச் செலவுகள், கல்விச் செலவுகள், திருமணத் தேவைகள் மற்றும் வீடு கட்டுவதற்கான செலவுகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பிஎஃப் தொகையை பெறப் பயன்படுத்தப்படலாம்.
2024-25 நிதியாண்டில், EPFO 2.34 கோடி முன்பணக் கோரிக்கைகளைத் தானியங்கி மூலம் தீர்வு செய்தது, இது முந்தைய ஆண்டை விட 161% அதிகமாகும்.
ATM மற்றும் UPI மூலம் பிஎஃப் தொகை:
புதிய அறிவிப்புடன், EPFO உறுப்பினர்கள் விரைவில் தங்கள் வங்கி கணக்கை EPFO கணக்குடன் இணைத்து, ATM அல்லது UPI மூலம் பகுதியளவு நிதியைத் திரும்பப் பெற முடியும்.
தற்போது, உறுப்பினர்கள் திரும்பப்பெறும் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும், அதனை பிஎஃப் அமைப்பு பரிசீலித்து அதற்கான தீர்வை வழங்குகிறது.
ATM மூலம் பணம் எடுக்கும் வசதி வந்துவிட்டால், ஊழியர்கள் உடனடியாகத் தங்களுக்குத் தேவையான பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.
இதுதொடர்பான செயலாக்க வழிமுறைகளில் மத்திய தொழில்துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இப்போது செய்யப்படும் அனைத்து மாற்றங்களும் EPFO உறுப்பினர்களின் வசதிக்காகவும், அவசர நிதித் தேவைகளுக்கு விரைவான அணுகலை வழங்குவதற்காகவும் செய்யப்படுகின்றன.