அடுத்த மாதம் மகளிர் உதவி தொகையுடன் ரூ.250 போனஸ்!.. சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
Ladli Behna Yojana Scheme 250 Increased
Ladli Behna Yojana Scheme 250 Increased: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: தமிழகத்தின் வெற்றிப் பயணம், இந்திய அளவில் விரிவாக்கம்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
தமிழகத்தில் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும்.
தமிழகத்தின் முன்னோடித் திட்டம்:
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மகளிர் மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர. இத்திட்டம், பெண்களுக்கு பொருளாதார ரீதியான பாதுகாப்பையும், சமூகத்தில் அவர்களின் பங்களிப்பையும் மேம்படுத்துகிறது.
இந்தியா முழுவதும் பரவிய தாக்கம்:
தமிழகத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் இத்திட்டம், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசுகளுக்கும் உத்வேகம் அளித்துள்ளது.
தமிழகத்தைத் தொடர்ந்து, கர்நாடகா, டெல்லி, ஜார்க்கண்ட், ஹரியானா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இதே போன்ற திட்டங்களை வெவ்வேறு பெயர்களில் அமல்படுத்தியுள்ளன. இந்த மாநிலங்களில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 முதல் ரூ.2,500 வரை வழங்கப்படுகிறது.
உதாரணமாக, மத்திய பிரதேசத்தில் 2023 ஆம் ஆண்டு முதல் ‘லட்கி பெனா யோஜனா‘ என்ற பெயரில் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,250 வழங்கப்படுகிறது.
சமீபத்தில், ரக்ஷா பந்தனை முன்னிட்டு, இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு அடுத்த மாதம் கூடுதலாக ரூ.250 போனஸாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு ஒரு புதிய பாதையை வகுத்துள்ளது.