Last Chance: Upload Land Records for PM Kisan
பி.எம். கிசான் திட்ட விவசாயிகளே கவனியுங்கள்! நில உடைமைகளை ஜூன் 30-க்குள் பதிவேற்றம் செய்ய அழைப்பு!
Last Chance: Upload Land Records for PM Kisan தூத்துக்குடி மாவட்டத்தில், பிரதமர் கிசான் கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள், தங்கள் நில உடைமை விவரங்களை வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
ஏன் இந்த அவசரம்? நில உடைமைகளை பதிவேற்றம் செய்யாத மற்றும் தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு, பி.எம். கிசான் திட்டத்தின் அடுத்த தவணை நிதி நிறுத்தப்படும். மேலும், எதிர்காலத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்ந்த அனைத்து அரசு மானிய திட்டங்களின் பலன்களைப் பெறவும் இந்த நில உடைமைப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
PM கிசான் 20வது தவணை ரூ.2000 டெபாசிட்!- வெளியானது முக்கிய தகவல்!
பதிவு செய்வது எப்படி? விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா அல்லது கூட்டுப் பட்டா, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுடன், அரசு கள அலுவலர்களையோ அல்லது அருகிலுள்ள பொது சேவை மையங்களையோ அணுகி பதிவு செய்யலாம். ஒவ்வொரு கிராமத்திலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் எந்தக் கட்டணமும் இல்லாமல் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் ஊக்கத்தொகை பெறும் 48,762 விவசாயிகளில், தற்போது வரை 37,211 பேர் மட்டுமே அடையாள அட்டை எண் பெறுவதற்காகப் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 11,551 விவசாயிகள் உடனடியாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உங்கள் நில உடைமை விவரங்களைப் பதிவேற்றம் செய்து, அரசு நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து பெறுங்கள்!