Happy News: புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை!- டபுள் ஜாக்பாட் அறிவிப்பு!
Magalir Urimai Thogai Latest Update May 25
Magalir Urimai Thogai Latest Update May 25: சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்கள் ஜூன் முதல் வாரத்தில், குறிப்பாக ஜூன் 4 ஆம் தேதி முதல் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மேலும் விரிவாக்கப்படவுள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

திட்டத்தின் பின்னணி மற்றும் தற்போதைய நிலை:
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 2023-ல் செயல்படுத்தப்பட்டது.
தற்போது இத்திட்டத்தின் மூலம் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதம் ரூ.1,000 தங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.
புதிய விண்ணப்பங்களுக்கான தகுதிகள் மற்றும் பதிவு:
கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிய ரேஷன் கார்டுகள் பெற்றவர்களும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 19 லட்சத்து 62 ஆயிரத்து 717 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த புதிய விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு விரைவில் அவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்றும், இதுவரை 9 லட்சத்து 44 ஆயிரத்து 452 பேர் தபால் மூலம் நகல் அட்டை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சக்கரபாணி சட்டசபையில் தெரிவித்தார்.
முன்னதாக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களும், தகுதி இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளனர்.
தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
விண்ணப்ப முகாம்கள் மற்றும் பயிற்சி:
புதிய விண்ணப்பங்களைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு முழுவதும் சுமார் 9000 இடங்களில் “மக்களுடன் முதல்வர்” முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு சென்னையில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம்கள் எங்கெங்கு நடத்தப்படும் என்ற விவரங்கள் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான தகவல்கள் பொதுமக்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதி வழங்கப்பட்டிருப்பதால், இது பொதுமக்களுக்கு ஒரு “டபுள் ஜாக்பாட்” அறிவிப்பாகும்.
தகுதி இருந்தும் இதுவரை இந்தத் திட்டத்தில் இணைய முடியாத குடும்பத் தலைவிகள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க உள்ளவர்கள் இந்த அறிவிப்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.