PM Kisan 20th Installment 2025
PM கிசான் திட்டம் ரூ.2000 வங்கியில் வரவு எப்போது?
ரூ.2000 வழங்கும் PM Kisan 20th Installment 2025: மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தின் 20வது தவணை ஜூன் மாதம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 9.8 கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். கடைசியாக, 19வது தவணையாக ரூ. 2,000 கடந்த பிப்ரவரி 24, 2025 அன்று பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த தவணையை ஜூன் மாதம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
முன்னதாக, 18வது தவணை அக்டோபர் 2024-லும், 17வது தவணை ஜூன் 2024-லும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 மூன்று சம தவணைகளாக (தலா ரூ. 2,000) நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
பி.எம். கிசான் திட்டம்: ஒரு பார்வை
- நோக்கம்: சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதி உதவி அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்.
- உதவித்தொகை: ஆண்டுக்கு ரூ. 6,000 (மூன்று தவணைகளில் தலா ரூ. 2,000).
- பயனாளிகள்: சாகுபடி நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயக் குடும்பங்களும். (குறிப்பிட்ட தகுதி நிபந்தனைகள் உள்ளன)
- தேவைப்படும் ஆவணங்கள்: ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள், நிலம் வைத்திருப்பதற்கான ஆவணங்கள், மொபைல் எண்.
- முக்கிய குறிப்பு: இத்திட்டத்தின் பலன்களைப் பெற e-KYC செயல்முறை கட்டாயமாகும். விவசாயிகள் இதை நிறைவு செய்யாதபட்சத்தில் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
உங்கள் பி.எம். கிசான் நிலை அறிய:
உதவித்தொகை நிலை அல்லது அடுத்த தவணை விவரங்களை அறிந்துகொள்ள, பி.எம். கிசான் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம். அங்கு “Farmers Corner” பகுதியில் “Know Your Status” என்பதைக் கிளிக் செய்து, ஆதார் எண், மொபைல் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணைப் பயன்படுத்தி உங்கள் நிலையை சரிபார்க்கலாம்.