தமிழ்நாடு அரசு அச்சுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!- ரூ.19,500 சம்பளம் Tamil Nadu Stationary and Printing Department Recruitment 2025

தமிழ்நாடு அரசு அச்சுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!- ரூ.19,500 சம்பளம்

Tamil Nadu Stationary and Printing Department Recruitment 2025

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Tamil Nadu Stationary and Printing Department Recruitment 2025: தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள Junior Binder பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Tamil Nadu Stationary and Printing Department Recruitment 2025

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை
  • பணியிட வகை: தமிழ்நாடு அரசு வேலை
  • பதவியின் பெயர்: Junior Binder
  • மொத்த காலியிடங்கள்: 05
  • மாத சம்பளம்: Rs. 19,500 – 71,900
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.08.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.08.2025
  • விண்ணப்பக் கட்டணம்: இல்லை

கல்வித் தகுதி

  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திலிருந்து Binder பிரிவில் தொழில்நுட்ப வர்த்தக சான்றிதழ் (Technical Trade Certificate) பெற்றிருக்க வேண்டும் அல்லது அப்ரண்டிஸ் சட்டம், 1961-ன் கீழ் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
  • அல்லது அச்சு தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (Diploma in Printing Technology) பெற்றிருக்க வேண்டும்.
  • பார்வையற்றவர்களுக்கு, பூந்தமல்லியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தால் (Government Industrial Training Centre for Blind) வழங்கப்பட்ட புத்தக பைண்டிங் (Book Binding) வர்த்தக சான்றிதழ் போதுமானது.

வயது வரம்பு

  • 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

  • தகுதியான நபர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பதாரர்கள் www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

ஆணையர்,

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம்,

110, அண்ணா சாலை,

சென்னை – 02.

விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் முழுமையாக சரிபார்த்துக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment