கிராம உதவியாளர் பணியிடங்கள்: 10-ம் வகுப்பு தேர்ச்சி- முழு விவரங்கள்!
TN Village Assistant Job 2025
TN Village Assistant Job 2025: தமிழ்நாடு முழுவதும் சுமார் மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் (VAO) கீழ் செயல்படும் இந்த கிராம உதவியாளர் (Village Assistant Recruitment 2025) பணியிடங்கள் நிரப்பப்படாததால், பணிச்சுமை அதிகரித்து வந்தது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
தற்போது, காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதுடன், தகுதியான நபர்களைத் தேர்வு செய்வதற்கான திருத்தப்பட்ட புதிய நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிராம உதவியாளர் பணி: ஓர் அறிமுகம்
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களின் முக்கியப் பணிகள்:
- வட்டாரத்திற்குட்பட்ட கிராமங்களில் வரி வசூலித்தல்.
- கணக்கு தரவுகளை சரிபார்த்தல் மற்றும் பாதுகாத்தல்.
- பிறப்பு, இறப்பு தரவுகள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பணிகளில் ஈடுபடுதல்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படாததால், ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக இருந்தன. தற்போது, இந்தப் பணியிடங்களை விரைந்து நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கல்வித் தகுதி மற்றும் தேர்வு முறை:
10-ஆம் வகுப்பு தகுதி போதுமானது!
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் பாடத்தை படித்து தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்.
எழுத்துத் தேர்வு கிடையாது!
கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. திறனறிவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மதிப்பெண் அடிப்படையிலான தேர்வு:
விண்ணப்பிக்கும் நபர்கள், அவர்களின் கல்வித் தகுதி, வண்டி ஓட்டும் திறன், எழுதி படிக்கும் திறன், வசிப்பிடம், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான மதிப்பெண் பகிர்வு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்: 10 மதிப்பெண்கள்
- சைக்கிள்/இருசக்கர வாகனம் ஓட்டும் திறன்: 10 மதிப்பெண்கள்
- தமிழ் வாசிப்பு மற்றும் எழுத்துத் திறன்: 30 மதிப்பெண்கள்
- வசிப்பிடச் சான்றிதழ்: 35 மதிப்பெண்கள்
- நேர்காணல்: 15 மதிப்பெண்கள்
மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு எடுக்கப்படும் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய குறிப்பு:
10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தாலும் அல்லது வாகனம் ஓட்டத் தெரிந்திருந்தாலும் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
வசிப்பிடத் தேவை:
விண்ணப்பதாரர்கள் அந்த கிராமத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். உள்ளூரிலேயே அரசு வேலை பார்க்க விரும்பும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
தேர்வு முடிவுகள்:
தேர்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளங்களில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விரைவில் இந்த கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். உங்கள் பகுதியிலேயே அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
More Job Updates- Click Now