கிராம உதவியாளர் பணி: 2,299 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு எப்போது?-முழு விவரம் இங்கே!
TN Village Assistant Notification 2025
TN Village Assistant Notification 2025: நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியிட்டது. சுமார் மூன்று ஆண்டுகளாகக் காலியாக இருந்த இந்தப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், மொத்தம் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கி அரசு இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

இதனைத் தொடர்ந்து, இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப நடைமுறைகள், தேர்வு முறை, அவகாசம் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பணியிட விவரங்கள் மற்றும் அறிவிப்பு:
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
குறிப்பாக, இந்தப் பதவிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதும், எழுத்துத் தேர்வு இல்லை என்பதும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், அறிவிப்பு எப்போது வெளியாகும் எனப் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
அறிவிப்பு வெளியீடு எப்போது?
- கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தமிழ்நாடு அரசின் அரசாணை ஜூன் இரண்டாம் வாரத்தில் வெளியான நிலையில், இதற்கான அறிவிப்பு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரியவந்துள்ளது.
- இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, வட்டார அளவில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு பணியைத் தொடங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான அவகாசம்:
- ஜூலை முதல் வாரத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானதும், விண்ணப்பங்கள் பெற 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
- எனவே, விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
கிராம உதவியாளர் பணிக்குத் தேவையான தகுதிகள்:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
- விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருப்பது கட்டாயம். 10-ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தைக் கொண்டு கட்டாயம் படித்திருக்க வேண்டும்.
- சைக்கிள் அல்லது இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருப்பது கூடுதல் சிறப்புத் தகுதியாகக் கருதப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட அம்சங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள்
- வாகனம் ஓட்டும் திறன்
- தமிழ் வாசிப்பு மற்றும் எழுத்துத் திறன்
- நேர்காணல்
- விண்ணப்பதாரர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
முதலில், விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்களுக்கு வாசிப்பு மற்றும் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்விற்கு அழைப்பு விடுக்கப்படும். 10-ஆம் வகுப்பு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்துச் சான்றிதழ்களின் சரிபார்ப்பு முடிந்த பிறகு, இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.
தயாராக வைத்துகொள்ள வேண்டிய முக்கிய ஆவணங்கள்:
விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, 21 நாட்களுக்குள் வாசிப்பு மற்றும் எழுத்துத் தேர்வும், 15 நாட்களுக்குள் நேர்முகத் தேர்வும் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்படும்.
ஆகவே, கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வலர்கள், கீழ்க்கண்ட ஆவணங்களை இப்போதே தயாராக வைத்துக் கொள்வது நல்லது:
- 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழ்
- ஓட்டுநர் உரிமம் (இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருந்தால்)
- வசிப்பிடத்தைச் சுட்டிக்காட்டும் சான்றிதழ்
- வீட்டு முகவரியைத் தெரியப்படுத்தும் வகையிலான அடையாள அட்டை (ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போன்றவை)
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பித்து அரசுப் பணி பெறும் கனவை நனவாக்கலாம்.