கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
Today School Leave For Rain June 16
Today School Leave For Rain June 16: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக, இன்று (ஜூன் 16, 2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டத்தில், தொடர் கனமழை காரணமாக உதகை, குந்தா, பந்தலூர், மற்றும் கூடலூர் ஆகிய நான்கு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ளார். மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில், வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் கிரியப்பனவர் விடுமுறை அறிவித்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அடுத்தகட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.