அரசு பள்ளிகளில் வாட்டர் பெல் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு! Water Bell in TN Government Schools

அரசு பள்ளிகளில் வாட்டர் பெல் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Water Bell in TN Government Schools

Water Bell in TN Government Schools: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்வதற்காக “வாட்டர் பெல்” திட்டம் ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Water Bell in TN Government Schools

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • வாட்டர் பெல் நேரம்: காலை 11 மணி, மதியம் 1 மணி மற்றும் பிற்பகல் 3 மணி ஆகிய மூன்று வேளைகளில் வாட்டர் பெல் அடிக்கப்படும்.
  • தண்ணீர் குடிப்பது: வாட்டர் பெல் ஒலித்தவுடன், மாணவர்கள் வகுப்பறைகளை விட்டு வெளியில் செல்லாமல், அவரவர் இருக்கும் இடத்திலேயே 5 நிமிடங்களுக்குள் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • நோக்கம்: அதிகரித்து வரும் வெயிலின் தாக்கம் மற்றும் நீரிழப்பு போன்ற உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து மாணவர்களைக் காப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். இது மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
  • முன்மாதிரி: கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே இத்திட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இத்திட்டம் குறித்து ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் இதுதொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Leave a Comment