மகளிர் உரிமைத் தொகை திட்டம்: இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம்! புதிய தளர்வு.. தமிழக அரசு அறிவிப்பு!
Magalir Urimai Thogai Unmarried Apply
Magalir Urimai Thogai Unmarried Apply: இந்தியாவிலேயே பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai).
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
மற்ற மாநிலங்களைக் காட்டிலும், இத்திட்டம் தமிழ்நாட்டில் முதன்முறையாகத் தொடங்கப்பட்டு, அதிக எண்ணிக்கையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ₹1,000 தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
திட்டச் செயலாக்கம் மற்றும் தகுதிகள்:
தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
மாதந்தோறும் பயனாளிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, இறந்தவர்கள், அரசு வேலைவாய்ப்பு பெற்ற குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், மற்றும் தகுதியில்லாதவர்களின் பெயர்கள் நீக்கப்படுகின்றன.
அதே சமயம், தகுதியானவர்களைக் கண்டறிந்து அவர்களை இத்திட்டத்தின் பயனாளிகளாக ஆக்குவதிலும் தமிழ்நாடு அரசு மிகுந்த முனைப்புக் காட்டுகிறது.
இந்த வகையில், இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாதவர்கள் அல்லது திட்டம் எப்போது விரிவாக்கப்படும் என காத்திருந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு தற்போது ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
திட்டம் விரிவாக்கம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான பல பெண்கள் இத்திட்டத்தில் சேர வேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கைகளின் பலனாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள் அனைவரும் ஜூலை 15 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
Magalir Urimai Thogai Unmarried Apply விண்ணப்பச் செயல்முறையில் புதிய வசதி:
இம்முறை கூடுதல் சிறப்பு என்னவென்றால், தகுதியான பெண்கள் இத்திட்டத்தில் சேருவதற்கு தன்னார்வலர்கள் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று உதவி செய்வார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதாவது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும், தேவையான ஆவணங்கள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கவும் இந்தத் தன்னார்வலர்கள் உதவுவார்கள்.
குடும்பத் தலைவிக்கான தகுதிகள் மற்றும் விதிவிலக்குகள்:
- ஒருவேளை பயனாளியின் வீட்டில் அனைத்து தகுதிகளும் இருந்து, ரேஷன் கார்டில் குடும்பத் தலைவியின் பெயர் இல்லை என்றால், அந்த வீட்டில் 21 வயது நிரம்பிய மகள் இருந்தால், அந்தப் பெண் இத்திட்டத்திற்கு தகுதியானவராகக் கருதப்பட்டு, அவர்களின் பெயரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
- அதேநேரத்தில், ரேஷன் கார்டில் பெயர் இருந்தும் அல்லது இல்லாமல் இருந்தும் குடும்பத் தலைவி இயற்கை எய்தியிருந்தால் கூட, அந்த வீட்டில் 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தில் விண்ணப்பித்து மாதம் ₹1,000 பெறலாம்.
- ஆனால், குடும்பத் தலைவி இருந்து ரேஷன் கார்டில் அவர் பெயர் விடுபட்டு இருந்து, மகளும் இல்லாமல் இருந்தால், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
- அத்தகைய சூழலில், குடும்பத் தலைவியின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும். ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கப்பட்ட பிறகு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
- குடும்பத் தலைவியும் இல்லாமல், தந்தை மற்றும் மகன் மட்டுமே இருக்கக்கூடிய குடும்பத்தினர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெற முடியாது.