பள்ளிகள் திறப்பு!..- வெளியானது மகிழ்ச்சி அறிவிப்பு!
School News Tamilnadu May 29
School News Tamilnadu May 29: ஜூன் 2-ம் தேதி அரசு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தபடி மட்டும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது.
அடிக்கடி பள்ளிகளுக்கு திடீரென சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மாணவ மாணவிகள் பாதுகாப்பாக பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அரசு பள்ளிகள் திறக்கப்பட இருப்பதை ஒட்டி பள்ளிக்கல்வித்துறை அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பாதுகாப்பிற்கு தலைமை ஆசிரியர் ஆசிரியர்களை பொறுப்பு என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது
மேலும் தமிழகத்தில் வருகின்ற ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை ஆனது வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் சரியாகவும் தரமானதாகவும் தாமதம் இன்றி வழங்குவது உறுதி செய்ய வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை நன்னீர் வகுப்புகள் தவறாமல் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது