சுய உதவிக் குழுக்களுக்கான சிறப்புக் கடன் திட்டம்! Suya Uthavi Kuzhu Loan Scheme 2025

சுய உதவிக் குழுக்களுக்கான சிறப்புக் கடன் திட்டம்!

Suya Uthavi Kuzhu Loan Scheme 2025

Suya Uthavi Kuzhu Loan Scheme 2025: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) வழங்கும் சுய உதவிக் குழுக்களுக்கான சிறப்புக் கடன் திட்டம்!

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

சிறு தொழில் தொடங்க அல்லது வாழ்வாதாரத்தை மேம்படுத்த விரும்பும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு! தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) வழங்கும் சுய உதவிக் குழுக்களுக்கான சிறப்புக் கடன் திட்டம் குறித்த முழு விவரங்கள் இங்கே.

Suya Uthavi Kuzhu Loan Scheme 2025

திட்டத்தின் நோக்கம்

பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண் சுய உதவிக் குழுக்கள், தங்களின் தனித்துவமான மற்றும் ஒருங்கிணைந்த தொழில் திறனை வளர்த்து, Suya Uthavi Kuzhu Loan Scheme 2025 குடும்ப வருமானத்தைப் பெருக்கி, நிதி சுதந்திரத்தை அடைவதற்கு உதவும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. Suya Uthavi Kuzhu Loan கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைக் கலைஞர்கள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், சேவை வழங்குநர்கள் என அனைவரும் பயன்பெறலாம்.

Suya Uthavi Kuzhu Loan

யாருக்கு இத்திட்டம்?

  • Suya Uthavi Kuzhu Loan பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
  • சுய உதவிக் குழுக்கள், குறைந்தது 6 மாதங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டு, சீரான நிதிப் பரிமாற்றங்களைச் செய்து வர வேண்டும்.
  • குழுவில் குறைந்தபட்சம் 60% பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
  • குழுவில் அதிகபட்சமாக 20 உறுப்பினர்களும், குறைந்தபட்சம் 10 உறுப்பினர்களும் இருத்தல் அவசியம்.
  • பிற்படுத்தப்பட்டோர் குழுக்களில் பெண்கள் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, பின்வரும் ஆவணங்கள் அவசியம்:

  1. சாதிச் சான்றிதழ்: மதம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் சாதி குறித்த தகுதியுள்ள சாதிச் சான்றிதழ்.
  2. வருமானச் சான்றிதழ்: குடும்ப ஆண்டு வருமானச் சான்றிதழ்.
  3. இருப்பிடச் சான்றிதழ்: வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்.
  4. ஆதார் எண் நகல்.
  5. இதர குழு உறுப்பினரின் இணைப்புகள் (அடையாள அட்டை, முகவரிச் சான்று போன்றன).

விண்ணப்பிக்கும் முறை:

உங்கள் அருகிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட / மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் / நகர கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகியவற்றை அணுகி விண்ணப்பிக்கலாம்.

கடன் திட்ட விவரங்கள்:

இந்தத் திட்டத்தின் கீழ், இரண்டு வகையான கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன:

திட்டம் – 1

  • அதிகபட்ச கடன் தொகை (ஒரு குழுவிற்கு): ரூ. 1,00,000/-
  • வட்டி விகிதம்: 7% (ஆண்டுக்கு)
  • தவணை தொகை அல்லது அசலுடன் திருப்பிச் செலுத்தும் காலம்: அதிகபட்சம் 3 ஆண்டுகள்
  • ஒரு குழு ஆண்டு வருமானம்: ரூ. 3,00,000/-க்கு மிகாமல்

திட்டம் – 2

  • அதிகபட்ச கடன் தொகை (ஒரு குழுவிற்கு): ரூ. 1,50,000/-
  • வட்டி விகிதம் (ஆண் பயனாளிகளுக்கு): 10% (ஆண்டுக்கு)
  • வட்டி விகிதம் (பெண் பயனாளிகளுக்கு): 8% (ஆண்டுக்கு)
  • தவணை தொகை அல்லது அசலுடன் திருப்பிச் செலுத்தும் காலம்: அதிகபட்சம் 3 ஆண்டுகள்
  • ஒரு குழு ஆண்டு வருமானம்: ரூ. 9,00,000/-க்கு மிகாமல்

Leave a Comment