டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு: காலி பணியிடங்கள் அதிகரிக்கும் வெளியான மகிழ்ச்சி தகவல் TNPSC Group 4 Vacancy 2025 Increase

TNPSC Group 4 Vacancy 2025 Increase

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு: காலி பணியிடங்கள் அதிகரிக்கும்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு: காலிப் பணியிடங்கள் கணிசமாக உயர வாய்ப்பு – வெளியான முக்கியத் தகவல்கள்!

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

சென்னை: தமிழக அரசுப் பணிகளில் சேரக் காத்திருக்கும் தேர்வர்களுக்கு ஒரு நற்செய்தி! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார். இது தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

tnpsc group 4 vacancy 2025 increase
tnpsc group 4 vacancy 2025 increase

 

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தேவையான அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்கள். குரூப்-1, குரூப்-2, குரூப்-4 போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகள் மூலம் இந்த நியமனங்கள் நடைபெறுகின்றன.

அந்த வகையில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 3,935 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் மே மாதம் 24-ஆம் தேதி வரை பெறப்பட்டன. சுமார் 20 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜூலை 12-ஆம் தேதி நடைபெற உள்ளது.

TNPSC Group 4 Vacancy 2025

காலிப் பணியிடங்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள்: இந்த ஆண்டு குரூப்-4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் கடந்த ஆண்டை விட அதிகரிக்கும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து TNPSC தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறியதாவது: “இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வில் 3,935 காலிப் பணியிடங்கள் உள்ளன.

இது தற்போதைய தோராயமான எண்ணிக்கைதான். தேர்வு முடிவுகள் வெளியாகி, கலந்தாய்வுப் பணிகள் நடைபெறும் வரை புதிய காலிப் பணியிடங்கள் சேர்க்கப்படலாம்.

பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த தகவல் பெறப்பட்டு, அவை இந்த குரூப்-4 தேர்வுடன் இணைக்கப்படும். காலிப் பணியிடங்கள் உடனடியாக அதே ஆண்டு தேர்வுடன் சேர்க்கப்பட்டு வருகின்றன. எனினும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை விடக் குறையாது.”

மேலும், “தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் உரிய பதவிகள் வருவாய் மற்றும் பதிவுப் பணிகளுடன் சேர்க்கப்படும். இதனால், காலி இடங்கள் நிச்சயமாக அதிகரிக்கும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேர்வுகள் முடிவடைந்த நிலையிலேயே வெளிவிடப்பட்டு வருகின்றன. தேர்வர்களின் நலன் கருதி விடைத்தாள் முழுமையான மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளன” என்றும் அவர் விளக்கமளித்தார்.

பிற முக்கியத் தேர்வு அறிவிப்புகள்: இதற்கிடையே, தற்போது ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகளுக்கான தொழில்நுட்பத் தேர்வுகள் ஜூன் 11-ஆம் தேதிக்குள்ளும், நேர்முகத் தேர்வு இல்லாத பணிகளுக்கான தொழில்நுட்பத் தேர்வுகள் ஜூன் 25-ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்-4 தேர்வுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலானோர் எழுதக்கூடிய குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இவற்றுக்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறும். TNPSC வெளியிட்ட ஆண்டுத் தேர்வு அட்டவணையில் குரூப்-1 இல்லாமலேயே குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளின் பணியிடங்கள் எண்ணிக்கை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment